Monday 14 December 2015

ஞானப்பானா-கிருஷ்ண கீதை 14

ஞானப்பானா-கிருஷ்ண கீதை 14

அத்தியாயம் 14 பிரகிருதி

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணாகோவிந்தாநாராயாண ! ஹரே!

அச்யுதானந்தாகோவிந்தாமாதவா!

                            ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

 

ഒന്നൊന്നായി നിനക്കുമ് ജനങ്ങൾക്ക് 

                                                ഒന്നുകൊണ്ടറിവാകുന്ന വസ്ഥുവായ്

                                                ഒന്നിലുമറിയാത്ത ജനങ്ങൾക്ക് 

                                                ഒന്നുകൊണ്ടുമ് തിരിയാത്ത വസ്തുവായ്

                                           ഒന്നുപോലെയൊന്നില്ലാതെയുള്ളത

ന്നൊന്നായുള്ളൊരു ജീവസ്വരൂപമായ്

ഒന്നിലുമൊരു  ബന്ധ്മില്ലാഥെയായ്

നിന്നവന് തന്നെ വിശ്വമ് ചമച്ഛുപോല്

മൂന്നുമൊന്നിലടന്ഗുന്നു പിന്നെയുമ്

ഒന്നുമില്ലപോല് വിശ്വമന്നേരത്ത്

தமிழில்

ஒன்னொன்னாய் நினக்கும் ஜனங்கள்க்கு

                                                ஒன்னுகொண்டறிவாகுன்ன வஸ்துவாய்

                                                ஒன்னிலுமறியாத்த ஜனங்கள்க்கு

                                                ஒன்னுகொண்டுமறியாத்த வஸ்துவாய்

                                                ஒன்னுபோலெயின்னில்லாதெயுள்ளத

                                                ன்னொன்னாயுள்ளொரு ஜீவஸ்வரூபமாய்

                                                ஒன்னிலொரு பந்தமில்லாதெயாய்

                                                நின்னவன் தன்னெ விசுவம் சமச்சுபோல்

                                                மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

                                                ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

நாம் முன் அத்தியாயங்களில் பூந்தானத்தின் மேற்கண்ட கவிதா வரிகளின் பொருளை விரிவாகபார்த்துக்கொண்டிருந்தோம்மேலே போவதற்கு முன், வியாக்கியானத்தின் தொடர்ச்சிக்காக நாம் கண்ட பொருளை  சுருக்கமாக பார்ப்போம்.
‘ இதுவா பிரம்மம், இதுவா பிரம்மம் என்று ஒன்றொன்றாக விசாரித்து நாமே பிரம்மம், எல்லாமே பிரம்மம், பிரம்மத்தை தவிர வேறொன்றில்லை;  இந்த அறிவே பிரம்ம ஞானம் .
ஆனால் இப்படிப்பட்ட ஞானம் பெறாத பாமரர்களோ பிரம்மம் எது என்று தெரியாத நிலையில், இந்த தேகமே நான், தேகத்திற்குண்டாகின்ற சுக-துக்கங்கள் ‘நானுக்கு’ உண்டானதாக எண்ணி, ஒரு மாய வலையில் சிக்கி பிறப்பு-இறப்பு என்ற சக்கர சுழற்சியில் மாட்டிக்கொண்டு அவதிப் படுகிறார்கள் ஒன்றே பலதாக தோன்றுகின்ற மாயையில் சிக்கி அவித்யாவினால் அவதிப்படுகிறார்கள்.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும்’ ஒரே பிரம்மத்தின் இருபக்கங்கள் தான்.ஜீவாத்மா பிரகிருதி எனும் மாயையினால் மூடப்பட்டு
ஏகத்துவத்திலிருந்து நானாத்துவம் தோன்றி இந்த பிரபஞ்சம் ஆவிர்பவிக்கின்றது என்று கண்டோம்.’
இந்த அத்தியாயத்தில் பிரகிருதியின் குணங்களை பார்ப்போம். ஏனென்றால் பிரகிருதி மாத்ரு பாவத்துடன் தோன்றுகின்றது. சகுண பிரம்மத்தின் மூடுபடமாக பிரகிருதி அமைகிறது. அந்த சகுண-பிரகிருதி சேர்க்கையினால் இந்த பிரபஞ்சம் தோன்றுவதால் மாத்ரு குணங்கள் பிரபஞ்சத்தில் அதிகமாக தென்படுகிறது. 
பிரகிருதி முக்குணங்களுடையது. குணங்கள் என்று சொல்வதன் மூலம் அது பிரகிருதியின் தனித்தன்மை, விசேஷ பிரபாவம் என்று நினைக்க வேண்டாம் இந்த குணங்களே அதன் இயற்கை. இந்த குணங்கள் இல்லாவிட்டால் ‘அது’ பிரம்மமாகிவிடும்.
இந்த மூன்று குணங்கள் தமோ குணம், ரஜோகுணம், சத்துவ குணம் என்பவையாகும்.
தமோ குணம் என்பது சாதாரணமாக, இருள், அறியாமை என்று பொருள் பட பேசப்படுகிறது. அது சரியல்ல.தமோ குணத்தின் விளைவுகளைக்கொண்டு அப்படி வியாக்கியானிக்கப் படுகின்றது. தமோ குணம், பிரகிருதியின் திடத்தன்மையை, உறுதியை, ஸ்திரத்தன்மையை குறிக்கின்றது.அது எதிர்ப்பு சக்தியைக் குறிக்கின்றது. இது தான் பிரபஞ்ச வஸ்துக்களுக்கு உருவத்தை அளிக்கின்றது. இதை ‘ஜாட்ய’ குணம் என்றும் கூறுவார்கள்.ஜாட்ய குணம் ஜடத்தன்மையை கொடுக்கின்றது. தமோ குணம் மட்டுமுள்ள வஸ்துக்கள் சலனமின்றி அசையாப் பொருள்களாக இருக்கின்றது.
ரஜோகுணம் பிரகிருதி-புருஷ சம்யோஜனத்தால் உருவான பொருள்களுக்கு உயிரோட்டத்தை கொடுக்கின்றது. சம்ஸ்கிருத மொழியில் ’ஊர்ஜம்’ என்றால் சக்தி ( energy) என்று பொருள்.இந்த சக்திபாவம் முந்தி நிற்கின்ற பொழுது பிரபஞ்ச வஸ்துக்கள் அசையும் பொருளாகிறது.
சத்துவ குணம் ‘லயத்தை’ குறிக்கின்றது.
இந்த மூன்று குணங்களின் சேர்க்கையில் ஏற்படுகின்ற ஏற்றத் தாழ்வுகளின் காரணமாக பிரபஞ்ச வஸ்துக்களில் சுபாவ பேதம் உண்டாகின்றது. அதை சற்று பின்னால் பார்ப்போம்.
இப்படிபட்ட குண நலன்களுடைய பிரகிருதியை தோற்றுவித்த ஈசுவர சக்தியை மாயை என்று கூறுகிறார்கள் .மாயை பிரம்மத்திலிருந்து  வேறல்ல; ஈசுவர தேஜஸ்ஸே மாயை. ஈசுவரனையும் மாயையும் வேர்பிரிக்க முடியாது. பிரபஞ்ச சிருஷ்டியில் ஈசுவரனுக்கும் மாயைக்கும் சம பங்குண்டு.
நீலகண்டாசாரியன் தேவீ பாகவதத்திற்கு வியாக்கினம் எழுதும்பொழுது கூறுவார்:

“ பிரம்மன் அல்லது ஈசுவரனுக்கும் மாயைக்கும் உள்ள பந்தம் நிலாவிற்கும்சந்திரனுக்கும்நிலா ஒளிக்கும் என்பதைப் போலவும் அக்னிக்கும் அதன் ஜ்வலன சக்திக்கும் உள்ளதுபோலவும் தான்

தேவீ பாகவதம்-ஸ்கந்தம் 6-அத்தியாயம் 15-சுலோகம் 49
இதே கருத்து தேவீ பாகவதத்தில் வேறு பல இடங்களிலும் காணப்படுகிறது.
உதாரணமாக:

                                                                        தஸ்ய சேச்சாஸ்ம்யஹம் தைத்ய !

                                                                        ஸ்ருஜாமி ஸகலம் ஜகல்

                                                                        ஸ மாம் பஸ்யதி விசுவாத்மா-

                                                                        தஸ்யாஹம் ப்ரக்ருதி: சிவா.

“தைத்யா, நான் புருஷோத்தமனான பிரம்மத்தின் இச்சா சக்தியாக   இருக்கிறேன். எல்லா ஜகத்தையும் நான் சிருஷ்டிக்கிறேன். விசுவத்தினுடைய ஆத்மாவான அந்த பிரம்மன் என்னை காண்கிறான். நான் அவருடைய இச்சையின் படி வர்த்திக்கின்றேன்”
இந்த சக்தி ஈசுவரனை நோக்கி இருக்கும்பொழுது அது ‘ மஹா வித்யா’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஈசுவரனிலிருந்து மாறுபட்டு, பிரம்மத்திலிருந்து விலகி இருக்கும் பொழுது ‘அவித்யா’ என்று அறியப்படுகிறது.
ஆகவே மாயையே இரண்டு பெயரால் அழைக்கப்படுகிறது
அத்யாத்ம ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது.

                                                                        ராம மாயா த்விதா பாதி

                                                                        வித்யா அவித்யேதி தே ஸதா !

‘ ராமா, மாயை இரண்டு விதத்தில் தோன்றுகிறது;அந்த இரண்டு ரூபங்கள் வித்யையும் அவித்யையும் ஆக இருக்கிறது
ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில் சொல்லுவார்:

                                                                        பூமிராபோ அனலோ வாயு:

                                                                        கம் மனோ புத்திரேவ ச

                                                                        அஹங்கார இதீயம் மே

                                                                        பின்னா ப்ரக்ருதிரஷ்டதா

                                                                                    அபரேயம்------

                                                ப்,கீ அத் 7 சுலோ 4-5
பூமி, ஜலம், அக்னி, வாயு, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம்  என்ற எட்டு விதமாக தோற்றங்களும் என்னுடைய ப்ரக்ருதியே; இது அபரா பிரக்ருதி ஆகின்றது”
மேலும் கூறுவார் கிருஷணர்:

                                                                        -----அன்யாம்ப்ரக்ருதிம்வித்திமேபராம்

                                                                        ஜீவபூதாம் மஹாபாஹோ !

                                                                        யயேதம் தார்யதே ஜகத்

‘மஹா சக்திமானான அர்ஜுனா, என்னுடைய இன்னொரு பிரக்ருதி உன்னதமானதும், ஜீவனுக்கு காரணமாகவும் இந்த உலகை பரிபாலித்து வருகின்றதும் ஆக இருக்கிறது.”
இந்த இன்னொரு பிரகிருதியை பகவான் 9 ஆம் அத்தியாயம் 13 ஆம் சுலோகத்தில் ‘ மம தெய்வீ பிரக்ருதி” என்று வருணிக்கிறார். இதை ‘யோக மாயை’ என்றும் கூறுவார்கள்.
மாயையின் குண நலன்களை தேவீ பாகவதத்தில் பல   இடங்களில் சிலாகித்து சொல்லப்பட்டிருக்கிறது: அதை அடுத்தஅத்தியாயத்தில் பார்ப்போம்அதுவரை நாம் பகவத் நாமம் ஜபிப்போம்

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணாகோவிந்தாநாராயாண ! ஹரே!

அச்யுதானந்தாகோவிந்தாமாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


No comments:

Post a Comment