Friday 1 January 2016

ஞானப்பானா—கிருஷ்ணகீதை 15

ஞானப்பானா—கிருஷ்ணகீதை 15


அத்தியாயம் 15 -மாயா

                

                      கிருஷ்ணா! கிருஷ்ணாமுகுந்தா!

                       ஜனார்தனா!கிருஷ்ணாகோவிந்தாநாராயாண ! ஹரே!

                      அச்யுதானந்தாகோவிந்தாமாதவா!

                                  ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

தேவீ பகவதம்

                                       ஏஷா பகவதீ தேவீ

                                    சர்வேஷாம் காரணம் ஹி ந:

                                    மஹாவித்யா மஹாமாயா

                                    பூர்ண்ணா ப்ரக்ருதிரவ்யயா

                                --------------------------------------------

                                    இச்சா பராத்மன: காமம்

                                    நித்யானித்ய ஸ்வரூபிணீ

                                --------------------------------------------

                                    வேதகர்பா விசாலாக்ஷீ

                                    ஸர்வேஷாமாதிரீஸ்வரீ

                                    ஏஷா ஸம்ருத்ய ஸகலம்

                                    விசுவம் க்ரீடதி ஸம்க்ஷயே

                                    லிங்கானி ஸர்வஜீவானாம்

                                    ஸ்வசரீரே நிவேஸ்ய ச

                                ------------------------------------------

                                    மூலப்ரக்ருதிரேவைஷா

                                    ஸதா புருஷ சங்கதா

                                    ப்ரம்மாண்டம் தர்ஸ்யத்யேஷா

                                    க்ருத்வா சை பரமாத்மனே.

                                    தஸ்யஷா காரணம் ஸர்வா

                                    மாயா ஸர்வேஸ்வரீ சிவா.

‘”இந்த சக்தியாகப்பட்டவள் பகவதியாகவும் தேவியாகவும் இருக்கிறாள். இவளே நம்முடைய பிறவிக்கு காரணமாகவும், மஹாவித்யாவாகவும் மஹாமாயையாகவும் பரிபூரணமானவளாகவும் நாசமில்லாதவளாகவும் இருக்கிறள்.இவளே பிரகிருதி.
பரமாத்மாவுடைய இச்சாசக்தியும் இவளே.இவள் நித்யானித்ய ஸ்வரூபிணி..
வேதத்தை உற்பத்தி ஸ்தானமாக கொண்டவளும் விசாலாக்ஷியும், சர்வேசுவரியும் அவளே.
இந்த சக்திதான் பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளையும் சம்ஹரித்து, சர்வ ஜீவாத்மாக்களையும் தன்னுள் இழுத்து வைத்து பரிபாலிக்கிறாள்.
இந்த ஜகன்மாதா சதா பரம்புருஷனோடு பிரகிருதி எனப்படுபவள்.இந்த சக்தி தான் பிரம்மாண்ட்த்தை சிருஷ்டித்து பரமனிடம் காண்பிக்கிறது.
எல்லாவற்றின் மூல காரணமும் இவளே.இவள் சர்வயும் மாயையும், சர்வேசுவரியும் சிவயும் ஆகிறாள்.”( தேவீ பாகவதம் 3-3-51-61)
தேவி பாகவத்த்தில் இந்த மாயயை மோக்ஷ காரிணி என்றும் அவித்யா என்றும் ஒரே நேரத்தில் கூறப்பட்டுள்ளது.ஈசுவர சாக்ஷாத்காரத்திரற்கு இவள் வித்யா ரூபத்தில் வழிகாட்டுகிறாள். கடைசியில் இந்த மாயையானது பரமனில் லயிக்கிறாள்.அப்பொழுது  ஆத்மபோதம் அடைந்து முக்தி கிடைக்கிறது.
அதே நேரத்தில் ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரித்து காண்பிக்கின்ற ‘பேத புத்தி’ யை ஜீவாத்மாவில் உளவாக்கி, ‘நீ வேறு’ நான் வேறு ‘என்ற உணர்வை உளவாக்கி, விருப்பு வெறுப்புகளுக்கு காரணமாகிறாள் இந்த மாயை அவித்யா ரூபத்தில் வர்த்திக்கின்றபொழுது.

                              பேதபுத்திஸ்து ஸம்ஸாரே

                              வர்த்தமானா பரவர்த்த்தே.

                              அவித்யேயம் மஹாபாக!

                              வித்யா அவித்யேசவிஞ்சேயே

                              சர்வதெய்வ விசக்ஷணை:

                              வினாஅதபம் ஹி ச்சாயாயா

                              ஜாயதே ச கதம் சுகம்

                              அவித்ய்யா வினா த்த்வல்

                              கதா வித்யாம் ச வேத்தி சை

வேற்றுமை மனோபாவம் ஆளுவதால் ஜீவாத்மாக்கள் சம்சாரத்தில் தத்தளிக்கிறார்கள். இது அவித்ய்யின் காரணமாக நிகழ்கிறது. மஹாபாகா ! இதிலிருந்து உன்னை விடுவிப்பது வித்யா தான். ஆத்மபோதமுள்ள்வர்கள் வித்யையும் அவித்யையும் தெரிந்துள்ளார்கள்.ஏனென்றால் எல்லோரிலும் இரண்டும் ஒரே நேரத்தில் வசிக்கின்றது.ஒன்றில்லையென்றல் மற்றொன்றில்லை. வெயில் இருந்தால் தான் நிழலின் அருமை தெரியும்.
இதே கருத்து அத்யாத்ம ராமாயணத்தில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

                              ப்ரவ்ருத்திமார்க்கனிரதா

                              அவித்யாவசவர்த்தின:

                              நுவ்ருத்திமார்க்கனிரதா

                              வேதாந்தார்த்தவிசாரகா:

                                அ.ராமாயணம் ஆரண்யகாண்டம் 3-320
பிரவிருத்திமார்க்கத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அவித்யையால் ஆளப்பட்ட்வர்களாகிறார்கள்; நிவிருத்தி மார்க்கத்தை அடைந்தவர்கள் வித்யாவின் ஆளுகையினால் வேதாந்த விசாரமுடையவர்களாக இருக்கிறார்கள்.
எப்பொழுதெல்லாம் ஜீவாத்மா பிரகிருதியின் ஆணைக்கு ஆட்ப்பட்டு கர்மங்களை ஆற்றுகின்றதோ அப்பொழுதெல்லாம் மாயை அவித்யாரூபத்தில் அவர்கள் மீது ஆட்சி செலுத்துகின்றது. எப்பொழுது ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கி செல்கின்றதோ அப்பொழுது மாயா வித்யாரூபத்தில் தோன்றி அவர்களை முக்தியை நோக்கி  செலுத்துகின்றது. அந்த நேரங்களில் ஜீவாத்மாவிற்கு மாயையின் மஹத் சக்தியும் தேவீ பாவமும் கிடைக்கப் பெற்று பரமாத்மாவுடன் ஜீவாத்மா லயிக்க ஏதுவாகின்றது.இதுவே மோக்ஷம்; முக்தி.
இதுவரை கடந்த சில அத்தியாயங்களாக நாம் வியாக்கியானம் செய்த  பிரம்ம்ம், நிர்குண-சகுண பிரம்ம்ம், பிரகிருதி, மாயை என்பதை சுருக்கமாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம்:
Ø  பிரம்ம்ம் அல்லது பரபிரம்ம்ம் அல்லது பரமாத்மா-----ஒன்றானவன்; அவனன்றி வேறில்லாதவன், அனசுவரன்( நாசமில்லாதவன்) ஆதியும் அந்தமில்லாதவன்,சர்வ வியாபி, சர்வஞ்சன், சர்வ சக்தன், அப்பிரத்தியக்ஷன்( காணக்கிடைக்காதவன்), நிர்குணன்,
பூந்தானத்தின் வார்த்தைகளில்

ഒന്നൊന്നായി നിനക്കുമ് ജന്ഗള്ക്കു

                                                          ഒന്നുകൊണ്ടറിവാകുന്ന വസ്ഥുവായ്

                                                          ஒன்னொன்னாய் நினைக்கும் ஜன்ங்கள்க்கு

                                                          ஒன்னுகொண்டறிவாகுன்ன வஸ்து

ஒவ்வொன்றாக விசாரித்து கடைசியில் எல்லாம் ஒன்றே ஏன்று அறியும் அது பிரம்ம்ம்

 

                             ഒന്നിലുമറിയാത്ത ജനന്ഗള്ക്കു

                              ഒന്നുകൊണ്ടുമ് തിരിയാത്ത വസ്തുവായ്

ஒன்னில்லுமறியாத்த ஜங்கள்க்கு

ஒன்னுகொண்டும் திரியாத்த வஸ்துவாய்

இந்த ஆத்மபோதம் பெற முடியாதவர்களுக்கு இது என்ன என்றே தெரிந்துகொள்ள முடியாமல் ஒரு அவ்வியக்தமான பொருளாக தெரிகிறது பிரம்ம்ம்

Ø  ஸகுண பிரம்ம்ம்-------------------------------------------------  ஏகன், ஈசுவரன், ஆத்மா, புருஷன், ஸத், சிதான்ந்தன்,
Ø  மூல பிரகிருதி--------------------------------------------------------அனாத்மா, அஸத், முக்குண ங்களையுடையவள், ஈசுவரோனோடு சேர்ந்து பிரபஞ்சத்தை படைத்தவள்

ഒന്നുപോലെയൊന്നില്ലാതെയുള്ളത

ന്നൊന്നായുള്ളൊരു ജീവസ്വരൂപമായ്

ഒന്നിലുമൊരു  ബന്ധ്മില്ലാഥെയായ്

നിന്നവന് തന്നെ വിശ്വമ് ചമച്ഛുപോല്

                                ஒன்னுபோலெயின்னில்லாதெயுள்ளத

                                 ன்னொன்னாயுள்ளொரு ஜீவஸ்வரூபமாய்

                                 ஒன்னிலொரு பந்தமில்லாதெயாய்

                                நின்னவன் தன்னெ விசுவம் சமச்சுபோல்


Ø  மாயா------------------------------------------------------------------------ஈசுவரனின் க்ரீயாசக்தி, இச்சாசக்த
Ø  பிரபஞ்சம்-------------------------------------------------------------------இகலோகத்தில் காண்கி ன்ற பௌதிக வஸ்துக்கள்.

முன்னொரு அத்தியாயத்தில் பிரகிருதி முக்குணமுடையாள் என்று கூறினோம்.பூந்தானம் சொல்லுகிறார்:

                        மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

                        ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

இந்த குண வேறுபாடுகளையெல்லாம், ஜீவாத்மா பரமாத்மாவுடன் லயிக்கும்  பொழுது ஆத்ம சாக்ஷாத்காரம் உளவாகின்றபொழுது  பிரகிருதி தன்னுள்ளே வாங்கிக்கொண்டு தான் சிருஷ்டித்த விசுவத்தையே-பிரபஞ்சத்தையே இல்லாதாக்கிவிடுகிறாள்.
இந்த முக்குணங்களை சற்று விரிவாக அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்
அதுவரை பூந்தானத்துடன் சேர்ந்து பகவத் நாம சங்கீர்த்தனம் செய்வோம்.
                                  கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!                                                                     கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!                                                                        அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!                                                    ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே








No comments:

Post a Comment