ஞானப்பானா –கிருஷ்ண கீதை 20
அத்தியாயம் 20 ஒன்றும் மூன்றும் 5
கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே
மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்
ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து
முன் அத்தியாயத்தில்
‘ஓம்’ என்ற பீஜாக்ஷர மந்திரத்தைக் குறித்தும், எல்லாமே பிரம்மம் தான் என்றும்
அந்த பிரம்மத்திற்கு நான்கு பாதங்கள் உண்டு என்றும், அதில் முதல் பாதம் ஜாக்ரத்
அவஸ்தை என்றும் ஜாக்ரத் அவஸ்தையில் ஜீவாத்மா வெளி பிரபஞ்சத்திலுள்ள பௌதிக
வஸ்துக்களை அனுபவித்து இன்ப துன்பங்களை நேடுகிறதென்றும் கண்டோம்.அந்த அவஸ்தையில்
ஜீவாத்மாவை வைஸ்வானரன் என்றழைக்கின்றோம் என்றும் அவன் ‘சப்தாங்கன் என்றும்
பத்தொன்பது வாயில்களை உடையவன் என்றும் மாண்டூக்கிய உபனிஷத்திலுள்ள மந்திரங்களின்
அடிப்படையில் விவரித்தோம்.
அந்த வியாக்கியானத்தை
தொடருவோம்.
ஏழு அங்கங்கள் யாவை?
பத்தொன்பது வாயில்கள் என்ன, என்ன? என்பதற்கான விளக்கங்கள் மாண்டூக்கியத்தில்
காணப்படவில்லை. அதற்கு முண்டகோபனிஷத்தை நாட வேண்டியுள்ளது.
முண்டகோபனிஷத்தி நமது
முனிவரியர்கள் கூறுகிறார்கள்:
अग्निर्मुऊर्धा,चक्षुषि चन्द्र-सूर्याउ, दिशा:श्रोत्रे, वाक् विव्रितास्च वेदा:,
वायु: प्रान:,ह्रिदयम् विश्वमास्य,पादभ्याम् प्रिथ्वि,एश सर्व-भूतान्तरात्मा
அக்னிர்மூர்தா,சக்ஷுசி சந்த்ர-சூர்யா,திசா ஸ்ரோத்ரே, வாக் விவ்ரிதச்ச வேதா:
வாயு:ப்ராண-ஹ்ரிதயம் விஸ்வமாஸ்ய பாதாப்யாம்,ப்ர்த்வி,ஏச சர்வ-பூதாத்மா
இந்த பரமாத்மன் எல்லோர் உள்ளிலும் அந்தராத்மாவாக
வசிக்கிறான். ஒளிமயமான ஆகாயம்-சிதாகாசம் அவனது புத்தியாகவும், சூரிய சந்திரர்கள்
அவனது கண்களாகவும், நான்கு திசைகளும் அவனது செவிகளாகவும்,வேதங்களே அவனது வாக்
இந்திரியமாகவும்,, வாயுவாகப்பட்டது அவனது ப்ராணனாகவும், இந்த விஸ்வபிரபஞ்சமே அவனது
இதயமாகவும், பூமியே அவனது கால்களாகவும் இருக்கிறது. இவனே வைஸ்வானரன் அல்லது
விஸ்வாத்மாஅல்லது விராட் புருஷன்.இவனைத்தான் புருஷ சூக்தத்தில் பாடியுள்ளார்கள். இந்த
விராட் ரூபத்தை தான் அர்ஜுன்ன் குருக்ஷேத்திர யுத்த பூமியில் கண்டான். சமாதான
தூதுவனாக சென்ற பொழுது கௌரவர்கள் கண்டதும் இந்த விராட் புருஷனைத் தான்; இதே
விஸ்வரூபத்தை யசோதாமாதாவும் பாலகிருஷ்ணனின் வாயில் கண்டாள்.அவனே விஸ்வத்திலுள்ள ஒரே
புருஷன், மஹாபுரூஷன், புருஷோத்தமன்,.
இந்த விஸ்வ புருஷனுக்கு பத்தொன்பது வாய்கள்
என்று கூறப்படுகிறது.அவை எவை?
ஐந்து கர்மேந்திரியங்களும் ஐந்து
ஞானேந்திரியங்களும் ஐந்து ப்ராணனுகளும் சேர்ந்து பதினைந்து ஆகிறது.
ஞானேந்திரியங்கள் என்பவை ‘ஸ்ரோத்றேந்திரியம்,
த்வக்கிந்திரியம், சக்ஷுசிந்திரியம், ஜிஹுவேந்திரியம், க்ரானேந்திரியம்.
இந்த இந்த்ரியங்கள் நமது ஸ்தூல சரீரத்திலுள்ள
சில அங்கங்களின் மூலமாக வெளி உலகத்துடன் தொடர்பு கொள்கிறது..
ஸ்ரோத்ரேந்திரியம் செவிகள் மூலமாகவும்,
சக்ஷுசேந்திரியம் கண்கள் வழியாகவும், த்வக்கிந்திரியம் உடலிலுள்ள சகல
உறுப்புக்களின் ஸ்பரிசம் மூலமும், ஜிஹ்வேந்திரியம் நாவின் ருசியறிதல் மூலமும்
க்ராணேந்திரியம் நாசித்துவாரங்கள் மூலமும் வெளியுலக தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது.
அதனுடன் தொடர்புடைய உடல் உறுப்புக்கள்
தான் நமது செயல்களை ஆற்றுகின்றது. செயல்கள் என்றால் பேச்சு, ஒலி, கைகளும்
கால்களும் பாயு-உபஸ்தா விசர்ஜன- உற்பத்தி
உறுப்புக்கள். இந்த உடல் உறுப்புக்களை கர்மேந்திரியங்கள் என்கிறோம். ஏனெனென்றால்
அவைகள் இல்லாமல் நாம் குறிப்பிட்ட செயல்கள் ஆற்றமுடியாது..இந்த ஸ்தூல அங்க
அவையவையங்களைத் தவிர ஐந்து சூக்ஷ்ம சரீர அவையவையங்களும் உள்ளன, ப்ரானா, அபானா,
வ்யானா, உதானா, மற்றும் சமானா.
மேலும்
‘அந்தக்கரண சதுஷ்டய” எனப்படும் ‘ மனசு,புத்தி, அஹம்காரா, மற்றும் சித்தம்’
எனுகம் நாலு வாயில்களும் உண்டும் அவ்வாறு பத்தொன்பது வாய்கள் அல்லது வாயில்கள்
வைசுவானரனுக்கும் உண்டு ஜீவாத்மாவிற்கும் இதே பத்தொன்பது வாய்கள் உண்டு. இந்த
பத்தொன்பது வாயில்கள் வழியாகத்தான் இந்திரிய விஷயங்கள் பிரவேசிக்கின்றன.
மனசாகப்பட்ட்து சிந்திக்கிறது,அலசி ஆராய்கிறது,
புத்தியாகப்பட்டது அதின் ஆராய்ச்சி முடிவை உட்கொண்டு முடிவுகளை எடுக்கிறது,இந்த
சிந்தனைகளையும் முடிவுகளையும் ‘தனது’ என்றாக்கிக்கொள்ளுகிறது ‘அஹங்காரா’.சித்தமோ
இவைகளையெல்லாம் ஒருங்கிணைத்து, ஞாபகத்தில் வைத்துகொள்கிறது; சமயம் வரும்பொழுது
எடுத்து கொடுக்கின்றது.
மனதின் சிந்தனைக்கேற்ப, புத்தியின் ஆணைக்கிணங்க
ஞானேந்திரியங்கள் வெளிவிஷயங்களை உள்வாங்க தயாராகி, கர்மேந்திரயங்களை இயக்குகிறது.
இப்படிப்பட்ட பத்தொன்பது வாய்களும் வெளி
விஷயங்களை அனுபவிப்பதில் பங்கு வகிங்க்கின்றது.
இரண்டாவது பாதம் ஸ்வப்னாவஸ்தை. இதில்
வர்த்திக்கின்றவனை தைஜஸன் என்று கூறுகிறது மாண்டூக்கியம்.
स्वप्नश्थानोन्थह्:प्रज्ना:
सप्तान्ग एकोनविम्सतिमुख:
प्रविविक्त-भुक्
तैजसो थ्वितीअ: पाद:
ஸ்வப்ன-ஸ்தானோஅந்த: ப்ரஜ்ன: சப்தாங்க ஏகோனவிம்சதிமுக: ப்ரவிவித்க-புக் தைஜசோ த்விதிய: பாத:
தைஜசனும் தனது ஏழு
அங்கங்கள் வழியாகவும் பத்தொன்பது வாய்கள் வழியாகவும் செயலாற்றுகிறான்.ஒரே ஒரு
வித்தியாசம் : இந்த அவஸ்தையில் அவனது ஸ்தூல சரீரம் செயல்படுவதில்லை; சூக்ஷ்ம
சரீரம் மட்டும் தான் வினையாற்றுகின்றது. அதே போல் இந்திரியங்களுக்கு தேவையான
விஷயங்களும் சூக்ஷ்ம ரூபத்திலேயே பிரத்தியக்ஷப் படுகின்றது.
यत्र सुप्तो न कम् चन कामम् काम्यते
न कम्चन्
स्वप्नम् पश्यति तत्षुप्तम्
सुषुप्तस्थान् एकीभूत: प्रज्नान्घन् एकानन्दमयो
ह्यानन्द-भुक् चेतो-मुख: प्रज्नास्त्रुतीय:पाद:
யத்ர
ச்உப்தோந கம்சன காம்ம் காமயதோ
ந
கம்சன ஸ்வப்னம் பஸ்யதி த்த்சுஷுப்தம்
சுஷுப்தஸ்தான்
ஏகீபூத: ப்ரஞ்சான்கன ஏவானந்தமயோ
ஹ்ய்-ஆன்ந்தபுக்
சேதோமுக்: ப்ரஜ்னாஸ்துருதீய
மூன்றாவது அவஸ்தை சுஷுப்தி எனப்படும்.ப்ரஜ்னா தான் இதின் அதிபதி.
இந்த அவஸ்தயில் எவ்வித சித்த விருத்திகளும் இராது; எவ்விதமான ஆசா-பாசங்களும்
தோன்றாது, ஸ்தூல-சூக்ஷ்ம சரீர பிரக்ஞ்சை இராது; கனவுகளும் இராது. அமைதியான
உறக்கம்.ஆனால் உறக்கத்திலிருந்து விழித்து ஜாக்ரத் அவஸ்தைக்கு திரும்பும்பொழுது
நன்றாக உறங்கினோம் என்பது ‘நானுக்கு’ த் தெரியும்.சுஷுப்தி நிலையிலும் ’நான்
ஸாக்ஷியாக விழித்துக் கொண்டிருந்த்து என்பதற்கு அது ஒன்றே ருசு.
ஆனால் மூன்றாவது
அவஸ்தை நிரந்தரமல்ல; அதிலிருந்து குறுகிய காலாயளவில் விழித்தெழுந்திருக்கிறோம்.
இந்த மூன்று நிலைகளையும் கடந்த ஒரு நிலை உள்ளது. அதை ஒரு அவஸ்தை என்று சொல்ல
முடியாது; அது தான் உண்மை சொரூபம்; அது தான் நித்தியம்; நிரந்தரம்,; நிச்சலம்;நிச்சிந்தியம்.
இதை துரீயம் என்கிறோம்.
नान्त: प्रज्न:, न बहिर्प्रज्न नोभयत्: प्रज्न न
प्रज्नान-घनम् न प्रज्न
नाप्रज्नम् !
अद्द्रिर्षड्म्मव्यवहारयम्,अग्राहयम्,अलक्षणम्
अचिन्थियम् अव्यपदेश्यमेकात्मप्रत्यय सारम्
प्रपन्जोपशमम्,
शान्तम्,शिवम्,अद्वैतम्,
चतुर्तम्
मान्यन्ते स आत्मा स विज्नेय:
இந்த நிலையில் ‘அது’
அந்தர்முகமாகவோ பஹிர்முகமாகவோ இராது;ஏனென்றால் அதற்கு ரூபம் கிடையாது; இரண்டு
முகமாகமும் இராது; அறியமுடிகின்ற அல்லது அறியமுடியாத ஒன்றாக இராது; எல்லாம்
அறிந்ததாகவும் ஒன்றுமே அறியாத்தாகவும் இருக்கும்;அங்கு அறிவதற்கும்
பார்ப்பதற்கும் ஒன்றுமிராது;அதிர்ஸ்யம்-பார்க்க முடியாதது,கேட்கமுடியாதது, தொட
முடியாதது, உண்ரமுடியாதது, ஏனென்றால் அங்கு பார்ப்பத்ற்கோ தொடுவதற்கோ, கேட்பதற்கோ
‘அதை’த் தவிர வேறொன்றிராது.எந்த விதமான குண நலன்களும் இல்லாதது,சிந்தனைகளுக்கப்பாற்பட்டது,வரையறுத்து
கூற முடியதது,சுருக்கமாக சொல்லப் போனால் ‘அது’ அது’வாக இருக்கும்; அங்கு மற்றொன்று
இராது; வேறொன்றில்லாததால் எதனுடனும் தொடர்பில்லாததாகவும் இருக்கும்.ஒன்றையன்றி
வேறொன்றில்லாததால் பரம சாந்தி நிலவும்;
ஜாக்ரத், ஸ்வப்னம்
சுஷுப்தி என்ற மூன்றும் அந்த ஒன்றில் லயித்துவிடும்; அப்பொழுது இந்த பிரபஞ்சமும் காணாமல்
போய் விடும். ஞானம், ஞேயம், ஞானகமயம் என்ற முப்பரிமாணங்களும் இல்லாமலாகிவிடும்.
அறிவு- ஞானம், அறியப்படும் பொருள் ஞேயம்; அறியப்படிதல் ஞானகமயம். ( காணுபவன்,
காட்சி, காணுதல்) என்ற மூன்றும் மறைந்து விடும்; அங்கு சத்சிதன்ந்தமே மிஞ்சும்.
இந்த அவஸ்தையைத் தான் பூந்தானம்
“மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்
ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து
என்று சொல்கிறார்.
பூந்தானத்தின் பிற
வரிகளை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.அதுவரை பூந்தானத்துடன் சேர்ந்து பகவத்
நாம சங்கீர்த்தனம் செய்வோம்
No comments:
Post a Comment