Tuesday 19 January 2016

ஞானப்பானா-கிருஷ்ண்கீதை 22

ஞானப்பானா-கிருஷ்ண்கீதை 22


அத்தியாயம் 22

கர்மபந்தனம் 2

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


 മൂന്നുജാതി നിരൂപിച്ചുകാണുമ്ബോള്

                                                    മൂന്നുകൊണ്ടുമ് തളൈക്കുന്നു ജീവനെ

                                                    പൊ ന്നിന്ചന്ഗലയൊന്നിപ്പറന്ജ്ന്ജതി

                                                   ലൊന്നിരുമ്ബുകൊണ്തെന്നത്രെഭേദന്ഗള്

രണ്ടിനാലുമെടുത്തു പണിചെയ്ത

                                                   ചന്ഗലയല്ലോ മിശ്രമാമ് കര്മ്മവുമ്


                       மூன்னுஜாதி நிரூபிச்சு காணூம்போள்

                                                     மூன்னுகொண்டும் தளைக்குன்னு ஜீவனெ

                                                     பொன்னின்சங்கலையொன்னிப்பறஞ்சதி

                                                     லொன்னிரும்புகொண்டதனெனத்ரபேதங்கள்

                        ரண்டுனாலுமெடுத்து பணிசெய்த

                         சங்கலயல்லோ மிஸ்ரமாம் கர்மவும்

இந்த பௌதிக பிரபஞ்சத்தை சிருஷ்டித்த  பரபிரம்மமே சிருஷ்டி, சம்ஹாரம், ரக்ஷித்தல்—ஆக்கல், போற்றல், அழித்தல் என்ற மூன்று கர்மங்களையும் செய்வதற்காக சத்துவ-ரஜோ-தமோ குணங்களை அடிப்படையாகக்கொண்டு மூன்றாகப் பிரிந்து ரஜோகுணத்தை வரித்து பிரம்மாவாகத் தோன்றி சிருஷ்டி கரமத்தையும், சத்துவ குணத்தை வரித்து விஷ்ணுவாக காத்தல் கர்மத்தையும், தமோ குணமெடுத்து அழித்தல் கர்மத்தை நிர்வகிப்பதற்காக சிவனாகவும் அவதரிக்கிறான். இந்த மும்மூர்த்திகளும் மூன்று வெவ்வேறு கர்மங்களையும் அனுஷ்டித்தாலும் அவர்கள் ஒவ்வொருவரும் எல்லாக் கர்மங்களையும் ஆற்றுவதற்கு சக்தியுடையவர்கள் தான் என்று நமது புராணங்கள் பல இடத்திலும் தெளிவு படுத்தியுள்ளது.மூன்று குணங்களும் ஒன்று சேர்ந்துதான் எல்லாக் காரியங்களும் நடை பெறுகிறது. சந்தர்ப்பத்திர்கு தகுந்தாற் போல் ஒரு குணம் மட்டும் பிரதானமாகக் காணப்படுகிறது. அவ்வளவுதான், அவை வெவ்வேறு சக்திகளல்ல.அவர்கள் பற்பல கர்மங்கள் செய்கிறார்களென்றாலும் எந்த ஒரு குணமோ விகாரமோ அவர்களை பாதிப்பதில்லை.சத் சிதானந்தன் சத் ரூபமாகவே நிலை கொள்கிறான்.
எந்த ஒரு குணம் மேலோங்கி நிற்கிறதோ அதற்கு அனுஸ்ருதமாய் பரமாத்மாவின் அம்சமான ஜீவாத்மாக்களின் கர்மங்களும் புண்ணிய கர்மங்கள் என்றோ, பாப கர்மங்கள் என்றோ, புண்ணிய-பாப கர்மங்கள் என்றோ உருவம் எடுக்கின்றது. சத்துவ குணம் மேலோங்கி நிற்கின்ற பொழுது புண்ணிய கர்மங்களும், தமோகுணம் மேலோங்கி நிற்கின்ற பொழுது பாப கர்மங்களும், ரஜோ குணம் மேலோங்கி நிற்கின்றபொழுது புண்ணிய-பாப கலவையான கர்மங்களும் ஆற்ற வேண்டி வருகிறது.
முன் அத்தியாயத்தில் கூறியது போல் நம் உள் மனதில் உறங்கிக் கிடக்கும் சம்ஸ்காரங்கள்-வாசனைகள் பிராரப்த கர்மங்களாக ஜீவாத்மாவுடன் பிறப்பிலேயே வருகிறது. அந்த வாசனைகள் வெளிவருவதற்கு வெளி பிரபஞ்சத்திலிருந்து ஒரு கிரியா ஊக்கி  (stimuli)  வேண்டி வருகிறது. அப்படிப்பட்ட கிரியா ஊக்கிகள் ஜீவாத்மாவில் தாக்கமேற்படுத்தும் பொழுது அது சத்துவ- ரஜோ தமோ குணங்களை தனதாக்கிக் கொள்கிறது..முன் ஜன்ம கர்மங்கள் புண்ணிய கர்மங்களாக இருந்தால் சத்துவ குணம் தான் எதிர்கொள்ளும் க்ரியா ஊக்கிகளுக்கு எதிர் வினையாற்றுகிறது.ஆகவே இந்த ஜன்ம கர்மங்களும் புண்ணிய கரமங்களாக பரிணமிக்கிறாது.மாறாக முன் ஜன்ம வாசனைகள் பாபகர்மங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தால் இந்த ஜன்மத்திலும் தமோ குணம் முன் தூக்கம் பெறுகிறது. பாபகர்மங்களை செய்யத் தூண்டுகிறது. அதே போல் ரஜோ குணம் புண்ணிய –பாப கர்மங்களை செய்ய வைக்கின்றது.
ஆனால் கர்மங்கள் எதுவாக இருந்தாலும் அவை நம்மை இகலோகத்துடன் பந்திக்கிறது. நாம் பந்தத்திலிருந்து விடுபட முடிவதில்லை.கட்டிப் போடுகின்ற சங்கிலியின் தரத்தில் தான் வேறுபாடு என்கிறார் பூந்தானம்.புண்ணியகர்மங்கள் செய்யும்பொழுது நாம் நல்லது செய்தோம் என்ற திருப்தி ஏற்பட்டு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சியின் பின்னால் ‘நான்’ செய்தேன் என்ற ‘அகந்தை’ ஒளிந்திருக்கிறது பாபார்மங்கள் செய்பவர்களும் நாம் மற்றவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தோம் என்ற மமதையில் மிதக்கிறார்கள். ரஜோகர்மத்தை அடிப்படையாகக் கொண்ட புண்ணிய –பாப கர்மங்களின் பின்னாலும் ‘ மமதாகாரம்’ செயல்படுகிறது.இந்த செயல்கள் எதுவும் ஆத்மா செய்யாததால் ‘நான்; செய்தேன் என்ற மமதாகாரம் வரும்பொழுது அந்த ‘நான்’ ‘நானல்ல’.அது ‘தனுவான நானென்ற எண்ணத்திலிருந்து உதித்த நானாக இருக்கிறது..ஆகவே இந்த கர்மங்கள் நம்மை பௌதிக உடலுடன் பிணைத்து ‘புனரபி மரணம் ,புனரபி ஜனனம்’ என்ற சக்கரச் சுழற்சியில் சிக்க வைக்கிறது.
ஆகவே பூந்தானம் ஒரு சங்கிலி தங்கத்தால் செய்த்தென்றல் இன்னொன்று இரும்பினால் செய்தது; மற்றொன்று உலோகங்களின் கலவையில் செய்தது என்கிறார். நிதரிசனமான உண்மை நாம் கட்டப்பட்டிருக்கிறோம் என்பது தான். கிளிக்கு தங்க கூண்டானால் என்ன? இரும்பு கூண்டானால் என்ன? கூண்டு கூண்டு  தான்.கர்மங்கள் பந்தமே-பந்தனமே.
இந்த கர்மங்களை அனுஷ்டிக்காமல் இருந்தால் விடுதலை கிடைக்குமா? நாம் முக்தியடைந்து விடுவோமா? பூந்தானம் இனிவரும் வரிகளில் பதில் சொல்லுகிறார். அதை அடுத்த அத்தியாயத்தில்ப் பார்ப்போம். இப்பொழுது பகவத் நாமம் சொல்லுவோம்.
                 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
                கிருஷ்ணாகோவிந்தாநாராயாண ! ஹரே!
                அச்யுதானந்தாகோவிந்தா! மாதவா!
                ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே
                                                           


No comments:

Post a Comment